articles

img

சந்திரயான்: என்சிஇஆர்டி வெளியீடும் போலி அறிவியல் கூற்றுகளும் -பேரா.பொ.இராஜமாணிக்கம், முனைவர் எஸ்.கிருஷ்ணசாமி

2023 அக்டோபரில் தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில் (NCERT)சந்திரயான்-3 குறித்து சிறப்பு விளக்கக் குறிப்புகளை  பள்ளி மாண வர்களுக்கு ஆங்கிலத்திலும் இந்தியிலும் வெளியிட்டு உள்ளது.  இதன் மீது கடுமையான விமர்சனங்கள் வந்த நிலையில் தமது இணைய தளத்தில்  இருந்து விலக்கிக் கொண்டது. ஆனால் ஒன்றிய அரசாங்கம் உடனடியாக  புராணங்கள், தத்துவங்கள் ஆகியன நமக்கு பல பல சிந்தனைகளை உருவாக்கி கண்டு பிடிப்புகளையும் புதுமைகளையும் ஊக்குவிக்கும் என்று இந்த விளக்கக் குறிப்புகளை ஆதரித்தது. இதனால் என்சிஇஆர்டி உற்சாகம் அடைந்து மீண்டும் அதை தமது  இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த விளக்கக் குறிப்புகள் தேசிய கல்விக் கொள்கை 2020ல் குறிப்பிட்டுள்ள வரையறைக்கு ஏற்றபடி கொடுக்கப்பட்டுள்ளன. 

இந்த விளக்கக் குறிப்புகள் தவறான அறிவியல் தொழில் நுட்பக் கோட்பாடுகளையும் போலி அறி வியல் கருத்துக்களையும் பல கோடி மாணவர்களி டம் எடுத்துச் செல்லும் அபாயம் உள்ளது. இது மாணவர்களின் அறிவியல் மனப்பான்மை வளர்ச்சிக்கு எதிரானதாகும். இதில் காணப்படும் தவறு களைக்  கண்டறிந்து அதற்குரிய அறிவியல் விளக் கத்தையும் கொடுத்துள்ளனர், பெரும்பான்மையான விஞ்ஞானிகள். தவறான இந்த விளக்கக் குறிப்பு களை விலக்கிக் கொள்ள, அகில இந்திய மக்கள் அறி வியல் இயக்கம் சார்பில் என்சிஇஆர்டி நிறுவனத்திற்கு வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

அறிவியல் பிழைகள்

அடிப்படைக் கல்வியில்...!

ராக்கெட், விண்கலம், லேண்டர், ரோவர்  பற்றி  தவறுதலாக  அடிப்படைக் கல்வி மாணவர்க ளுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. அதாவது ராக் கெட்டினுடைய பகுதிகள் பூமியோடு தொடர்பு கொள்ள முடியாததால் சந்திரயான் 2 தோல்வி அடைந்தது எனக் குறிப்பிட்டுள்ளது.(code 1.1 F, kindergarten and grades 1-2) உண்மையில் ராக்கெட் திறன்பட செயல் பட்டது. ஆனால் லேண்டர் தான் நிலவில் இறங்கும் போது தோல்வி அடைந்தது. சொல்லப் போனால் ஆர்பிட்டர் மாடுயுல் இன்னும் தகவல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ராக்கெட் தோல்வி அடைந்தால் ஆர்பிட்டர் நிலவுக்கு அருகிலேயெ செல்ல முடிந்தி ருக்காது.

ஆரம்பக் கல்வியில் (3-5 வகுப்புகள்)
ராக்கெட்டில் இரண்டு முக்கியமான பகுதிகள் உள்ளன என்றும் அவை லாண்டர், ரோவர் ஆகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது (code 1.2 P, grades 3-5). உண்மையில் விண்கலத்தில் மட்டுமே ஆர்பிட்டர், லேண்டர் இருந்தன. லேண்டரில் ரோவர் இருந்தது. விண்கலத்தை ராக்கெட் எடுத்துச் சென்று சுற்றுப் பாதையில் நிறுத்துவது மட்டுமே அதன் வேலை.

நடுநிலைக் கல்வியில்... 
நிரந்தரமாக நிலவில் சூரிய ஒளி விழும் தென் துருவ மலை முகடுகளில் சந்திரயான் 3 இறங்குவதால் நமது சந்திரயானுக்குத் தேவையான சூரிய ஆற்ற லைப் பெற முடியும் என்கிறது (code: 1.3M, grades 6-8). ஆனால் சந்திரயான்-3, தென் துருவத்தில் இருந்து 500கிமீ  தள்ளியே இறங்கியுள்ளது.

சித்திரை மாதம் என்பது சித்திரை நட்சத்திரம் நிலவைக் கடப்பதாகும் என்கிறது இந்த மாடுயுல் (code 1.5S). ஆனால் சித்திரை நட்சத்திரப் பின்புலத்தில் நிலவு கடந்து செல்கிறது என்பதே உண்மை.

இரவு வானில் நிலவே மிகப் பெரிய விண்வெளி பொருள் என்று குறிப்பிடுகிறது (code 1.6S). உண்மை யில் நிலவு நமக்குப் பக்கத்தில் இருப்பதால் பெரிதாகத் தெரிகிறதே தவிர அது பெரிதானதல்ல. மேலும் நிலவு சூரியக் காற்றில் இருந்து பூமியைக் காப்பாற்றுகிறது என்பதும் தவறானதாகும்.

சந்திரயான் - 2 பயணம் நிலவில் பனித் தகடுகள் இருப்பதாக கண்டுபிடித்துள்ளது (code 1.6S) எனக் கூறப்பட்டுள்ளது. இது தவறானதாகும். ஆனால் தண்ணீர் மூலக்கூறுகள் இருப்பதாக மட்டுமே இப்பய ணம் கண்டுபிடித்துள்ளது.நிலவின் பள்ளங்களில் உள்ள தண்ணீர் மூலக்கூறுகள் பனித் தகடுகள் உரு வாக்கும் அளவுக்கு இல்லை என்பதே உண்மை.

பூமி தன்னைத் தானே சுற்றிவர 24 மணி  நேரம். இதையே நாம் ஒரு நாள் என்கிறோம். அதே போல் நிலவின் ஒரு முகம்  சூரியனை நோக்கி வெளிச்சம் பெறுகிற 14 நாட்களையே நாம் ஒரு நிலவு நாள் எனக்கூறுகிறோம் (code 1.7S) என்பது  தவறான தாகும். ஒரு நிலவு நாள் என்பது பூமியின் கணக்குப் படி 27.3 நாட்கள் ஆகும். 

240.25 மணி அல்லது 10 நாட்கள் 0.25 மணி (அதா வது 10 நாட்கள் 6 மணி நேரம், எனக் குறிப்பிட்டுள்ளது (code 1.7S) தவறானதாகும். அது 246 மணி நேரம் என்றிருக்க வேண்டும்.

பூமியின் ஈர்ப்பு வேக வளர்ச்சி (9.81m/s2) பூமியின் சுற்றுப் பாதையின் வேகத்தையும் (29.81m/s2) ஒன்றாக்கி (code 1.7S) இரண்டையும் சேர்த்து புவி ஈர்ப்பு விசை எனக் கூறுவது  அறிவியல் தவறாகும்.

மேல்நிலைப்பள்ளி வகுப்பு மாணவர்களுக்கு!
நமது பூமியில் 24 மணி நேரமே ஒரு நாள் ஆகும். பூமி தன்னைத் தானே ஒரு முறை சுற்ற 24 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. ஆனால் நிலவில்  ஒரு சுற்றுச் சுற்றும் ஒரு நாள் என்பது 14 பூமி நாட்கள் ஆகும். அதனால் தான் அக்.23, 2023 நிலவு நாளின் துவக்க நாளாகக் கருதப்படுகிறது(code 1.9HS). இதை நிலவு ஒருமுறை தன்னைத் தானே சுற்றி வர 27.3 புவி நாட்களை எடுத்துக் கொள்கிறது என்றும் நிலவின் ஒரு பகுதி தொடர்ந்து 14 புவி நாட்களுக்கு ஒளி பெற்றிருக்கும் என்பதால் அந்த நாளில் விண்கலம் இறங்க திட்டமிடப்பட்டது என்றிருக்க வேண்டும்.

போலி அறிவியல்
நடுநிலைக் கல்வி  (6-8 வகுப்புகள்): 
நமது நாட்டில் பண்டைய காலத்தில் விமான சாஸ்திரம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அதில் எவ்வாறு விமானங்கள் கட்டமைக்கப் பட்டது, எஞ்ஜின்களின் செயல்பாடு பற்றி குறிப்பிட் டுள்ளனர் என்றும் சொல்லப்பட்டுள்ளது (code: 1.3M, grades 6-8). ஆனால் பண்டைய இந்திய விமான சாஸ்திரம் போலி அறிவியல் என்றும் 20 ஆம் நூற்றாண் டில் தான் விமான அறிவியல் வளர்ந்தது என்றும் 20ஆம் நூற்றாண்டு காலக் கட்டத்தில் தான் விமானங்கள் உருவானது என்றும் உலகெங்கும் அறியப் பட்டுள்ளது.

வேதங்களில் ரதங்கள் பறந்தன என்றும் அவை எந்திரப் பறவைகள் என பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளதாம். பறக்கும் ரதங்களும் பறக்கும் வாகனங்களும் யுத்தத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளதாம். எல்லாக் கடவுள்களும் விண்ணில் இருந்து பூமிக்கும் கிரகங்களுக்கிடையேயும் பிரபஞ்சத்திலுள்ள பல லோகங்களுக்கு பயணம் செய்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளதாம். அவை விண் வெளியில் சத்தம் இல்லாமல் பறந்தன எனக் குறிப் பிட்டுள்ளனர். அதில் ஒன்று தான் ராவணன் பறந்த புஷ்பக விமானம் என்ற எடுத்துக் காட்டையும் குறிப்பிடு கின்றனர்(code: 1.3M, grades 6-8).

மேலே குறிப்பிட்ட அனைத்தும் வேதங்கள், புரா ணங்களை எழுதிய கவிஞர்களின் கற்பனையே தவிர வேறெதுவும் இல்லை. உலகிலுள்ள எல்லாக் கலாச்சாரங்களிலும் இந்தக் கதைகள் காணப்படு கின்றன. பூமியை விட்டு விண்வெளியில் பறந்த முதல் மனிதன் யூரி ககாரின்(1961)தான். அதைத் தவிர யாரும் பறந்ததாக ஆதாரங்கள் எதுவுமில்லை.மேலே சொன்ன இலக்கிய ஆதாரங்கள் அனைத்தும் பாரத தேசத்தின் விண்வெளி அறிவியலின் பெருமையைக் காட்டுகிறது என்கிறது என்சிஇஆர்டி விளக்கக் குறிப்பு கள். இது முற்றிலும் அறிவியல் ரீதியாக விக்ரம் சாரா பாய் போன்ற மாபெரும் விஞ்ஞானிகள் விண்வெளி ஆராய்ச்சிக்காக செய்த முயற்சிகளையும் செயல்பாடு களையும் புறக்கணிப்பதாகவே உள்ளது.

பண்டைய பாரதீய நூல்கள் விண்வெளி வீரர்கள் உட்பட விண்வெளித் துறைக்குத் தேவையான அனைத்து அறிவியல் அறிவின் பொக்கிஷங்கள் எனக் கூறலாம்(code: 1.3M, grades 6-8) எனக் குறிப்பிட் டுள்ளனர். வழக்கம் போல இதுவும் ஒரு கற்பனை மிகுந்த கட்டுக் கதையே.

உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு!
நிலவின் ஒளியில் இருந்தால்  நோய்களை குண மாக்கும் தன்மையும் ஆரோக்கியமும் தெம்பும் கிடைக்கும் என நாட்டுப்புற இலக்கியங்கள் கூறு கின்றன என்பது (code 1.5S) அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாத போது அதைக் குறிப்பிடுவது சம்பந்தமில்லாத புனைவு மட்டுமே ஆகும்.

  • கட்டுரையாளர்கள் : அகில இந்திய மக்கள் அறிவியல் 

              இயக்க கூட்டமைப்பின் தலைவர்கள்.